ஜனவரி 27 2014
தந்தி தொலைக்காட்சி நிருபர் கோகுல ரமணன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.
இதற்கு முன்னர் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் சதீஷ் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
எனவே இந்த இரண்டு சம்பவத்திலும் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.