காதலன்: அன்பே!
என் பாரசீக ரோஜாவே…..
இங்கே வா…..
காதலி: இதோ….
காதலன்: உன் இதழ்
சுவைப்பதன் காரணம்
என்னவோ???
காதலி: உப்பு கொண்ட அனைத்தும்
மனிதனுக்கு சுவைக்கும்
காதலன்: உன் இதழ்
தேன் கனியன்றோ???
காதலி: உன் வியர்வை
என் இதழில்
அதுவே காரணம்…..
காதலன்: தலைதூக்கினால்
நம் மாளிகையில்
எத்தனை நட்ச்சதிரங்கள் பார்….
காதலி: நம் கூரையின்
அத்தனை ஓட்டைகளையும்
அது சொல்கிறது.
காதலன்: உன் கையால் குடித்தால்
கூழும், விருந்துதான்.
காதலி: என்ன செய்ய
சுரண்டபட்ட உன்
உழைப்பின் மிச்சம்
இதுதான்.
காதலன்: உனக்கு
கனிவாய் பேச தெரியாதா???
காதலி: எனக்கு
கனவாய் பேச தெரியாது.
காதலன்: இருப்பதை கொண்டு திருப்தி கொள்
காதலி: இழப்பதை எண்ணி சினம் கொள்.
காதலன்: உன்னோடு
நான் சொர்கத்தை நோக்கி
செல்லவிரும்புகின்றேன்.
காதலி: உண்மையான காதலர்கள்,
போராட்ட களத்தை நோக்கியே செல்கின்றனர்.
காதலன்: நானும் போராட்டத்தில் தான் இருக்கின்றேன்….
காதலி: மூலம் தெரியாத போராட்டம் தற்கொலை…
காதலன்: அப்படியா?? சரி…
எங்கு தொடங்க….
எங்கு முடிக்க???
காதலி : மார்க்ஸ் முதல் உன் வரை தொடரு…..
காதலன்: நன்றி தோழர்…..